பிரட் பிட்சா

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஆரிகனோ, உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முதலில் டோஸ்டர் அல்லது தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் மேல் சிறிது தக்காளி கெட்சப்பை தடவ வேண்டும். பிறகு அதன் மேல் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை பரப்ப வேண்டும். அதன் பின் அவற்றின் மேல் சிறிது துருவிய சீஸை பரப்ப வேண்டும். பின்னர் அந்த பிரட் துண்டை சூடான தோசைக்கல்லின் மீது வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் சீஸை உருக வைத்து எடுத்தால், சுவையான பிரட் பிட்சா தயார்.