வருசநாடு, ஜன.22: வருசநாடு பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினசரி 50 ஆயிரம் தேங்காய் ஏற்றுமதியாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, குமணன்தொழு போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான தென்னை மரங்கள் உள்ளது. இதில் சில்லறை வியாபாரிகள் தேங்காய்களை பறித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் தேங்காய் விலை தற்போது 17 ரூபாயிலிருந்து 18 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு பகுதியில் இருந்து தினசரி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் ஏற்றுமதியாகி வருகிறது. இவை முதல், இரண்டாம், மூன்றாம் என தரம் பிரித்து ஏற்றுமதி செய்வது வழக்கமாக உள்ளது.