தேசிய இளைஞர் வார விழா

போடி, ஜன. 22:  போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தில், நேரு யுவகேந்திராவின் கீழ் இயங்கும் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் தேசிய இளைஞர் வார விழா மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள், கிராமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். ெதாடர்ந்து கபடி, கோகோ, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: