எஸ்டிபிஐ சார்பில் கண்காட்சி

கம்பம், ஜன. 22:   கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ‘பாபர் மசூதியை மீட்போம்’ என்ற தலைப்பில் வரலாற்று கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட செயலாளர் முகமது யூனுஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஜமாஅத் உலமா மாநில துணைத்தலைவர் மவுலானாஅலாவுதீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் துவக்கி வைத்தார். தேனி மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாகின், கம்பம் நகர செயலாளர் யூனூஸ்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு, பாபர்மசூதி தொடர்பாக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் கவிதைபோட்டி நடந்தது. இதில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: