இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்

தேனி. ஜன. 22.  பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த அருந்ததிய மக்கள்,  தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைமையில் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமம் 10வது வார்டு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அருந்ததியர் ஏராளமானோர் நேற்று கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 100 தொடுப்பு வீடுகள் கட்டி காலனி வழங்கப்பட்டது. இந்த வீடுகளில் தற்போது 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் வீடுகளும் பழுதடைந்து விட்டது.  எனவே, பழுதடைந்த வீடுகளை புதுப்பிப்பதோடு, வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தனர்.

Related Stories: