ஆண்டிபட்டி, ஜன.22: ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 436 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் மகாராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அமமுக சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், மருத்துவர் அணி செயலாளர் கதிர்காமு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரன், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பாஜ நிர்வாகி வேல்முருகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.