வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி, ஜன.22: திருச்சி கே.கே.நகர் ஈவிஆர் ரோட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் பவுல்ராஜ் (27). இவர் நேற்று முன்தினம் தென்றல் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 பேர் பவுல்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500ஐ பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த கே.கே.நகர் போலீசார் பணம் பறித்து சென்ற பிரஜேஸ்குமார், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: