தா.பேட்டையிலிருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

தா.பேட்டை, ஜன.22:  தா.பேட்டையிலிருந்து முருக பக்தர்கள் சுமார் 50க்கு மேற்பட்டோர் பாதயாத்திரையாக பழனி முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

தைப்பூச விழாவை முன்னிட்டு தா.பேட்டை பழனி பாதயாத்திரை குழுவினர்  தா.பேட்டை சிவாலயத்தில் அமைந்துள்ள ஆறுமுகப்பெருமான், தேவானூர் சண்முக கிரி மலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு  அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தா.பேட்டையிலிருந்து 50க்கு மேற்பட்ட பக்தர்கள்  பாதயாத்திரையாக பழனி முருகனை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.

Related Stories: