திருச்சி கோட்ட ரயில்வேமுதுநிலை வணிக மேலாளர் சென்னைக்கு இட மாற்றம்

திருச்சி, ஜன.22: திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் அருண்தாமஸ் கலாதிகல் சென்னைக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளராக இருந்தவர் அருண் தாமஸ் கலாதிகல். இவர் மீது தொழிலாளர் நலன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இவர், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே துணை முதன்மை இயக்குதல் பிரிவு மேலாளர் நரேன், திருச்சி கோட்ட வணிக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: