காலியிடங்களை நிரப்ப கோரி வணிகவரி அலுவலர்கள் நூதன போராட்டம்

ராமநாதபுரம், ஜன.22: ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிகவரி துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் கருப்பு பேஜ் அணிந்து வேலைக்கு வந்தனர்.தமிழகம் முழுவதும் வணிகவரி துறையில் காலியாக உள்ள துணை ஆணையர், உதவி ஆணையர், வணிகவரி அலுவலர்கள், துணை வணிகவரி அலுவலர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட வேண்டும். முதுநிலை அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் என மூன்று இடங்களில் வணிகவரி அலுவலகங்கள் உள்ளன. மாநிலத்தில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: