திருவாடானை, ஜன.22: இருபது நாட்களாக குடிநீர் வராததால், ஊராட்சி அலுவலகத்தை கருப்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானை அருகே ஆதியூர் ஊராட்சியை சேர்ந்த கருப்பூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு திருவாடானையில் இருந்து காரங்காடு கிராமம் வழியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.