அச்சத்தில் மக்கள் பரமக்குடி அருகே தகராறு செய்த 3 பேர் கைது

பரமக்குடி, ஜன.22: பரமக்குடி அருகே குடிபோதையில் தகராறு செய்ததாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பரமக்குடி அருகே வெங்கட்டன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமுருகன்(40). அப்பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் மதுகுடித்து விட்டு போதையில் சாலையில் வழி விடாமல் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விஜய்(31), மனோஜ்குமார்(20), அந்தோணிராஜ்,(23), அய்யன்காளை (25) ஆகியோர் கம்பி மற்றும் கம்பால் தாக்கி, டூவீலரை சேதப்படுத்தியதாக பரமக்குடி தாலுகா காவல்நிலையத்தில் ஜெயமுருகன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், மனோஜ்குமார் அந்தோணிராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: