சத்தியமங்கலம், ஜன.22: பவானிசாகரை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் விவசாயி நந்தகுமார்(45). இவர் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறும் ஒற்றையானை தினமும் பெரியார் நகர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை நந்தகுமாரின் தோட்டத்தில் புகுந்து தேன்வாழை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. யானைகள் வாழைமரங்களை சேதப்படுத்தும் சத்தம் கேட்ட விவசாயிகள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.