மாவட்டம் குற்றங்களை தடுக்க சிசிடிவி

ராஜபாளையம், ஜன. 22:  ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க, சேனைத்தலைவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் முதலியார் நடுத்தெரு, தெற்கு தெரு, மேற்கு ெதரு உள்ளிட்ட 5 வீதிகளை கண்காணிக்க 5 கேமராக்கள், பிரதான சாலையில் ஒரு கேமரா, அப்பகுதியில் உள்ள கோயிலின் உள்பகுதியில் ஒரு கேமரா என ரூ.1 லட்சம் மதிப்பில் 7 சிசிடிவி கேமராக்களை பொருத்தி, எல்சிடி டிவியுடன் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு கேமராக்களை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சேனைத்தலைவர் உறவின்முறை தலைவர் மாரிமுத்து ஆகியோர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: