சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்

ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையத்தில் ’துளி’ பவுண்டேசன் பின் 2ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.

தொழிலதிபர் ராம்குமார் தலைமை வகித்தார். கவிஞர் ஆனந்தி வரவேற்றார். துளி அமைப்பின் செயல்பாடு மற்றும் நற்பணி குறித்து உறுப்பினர் அறிவொளி எடுத்துரைத்தார். அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆலோசகர் அக்ரி.சுப்ரமணிய ராஜா பேசினார். சிறப்பு விருந்தினராக தாசில்தார் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, சிறப்பாக களப்பணியாற்றிய உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.அமைப்பின் ஆலோசகர் ஈரோடு ரமேஷ்குமார் மற்றும் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன், மதுரை இறகுகள் நிறுவனர் ரவீந்திரன் நடராஜன், கோவை குளம் காப்போம் மற்றும் நொய்யல் மறுசீரமைப்பு குழு உறுப்பினர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துளி அமைப்பு செயலாளர் முத்துமணி, விஷ்ணுகுமார் மற்றும் ஸ்ரீராம் செய்திருந்தனர்

.

Related Stories: