கிராம சபை கூட்டங்களைவீடியோவில் பதிவெடுக்க கோரிக்கை

விருதுநகர், ஜன. 22: ஜன.26ல் நடக்கும் அனைத்து கிராம சபை கூட்டங்களையும் வீடியோவில் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன.26ல் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். அந்த கூட்டங்களை நேர்மையான முறையில் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், அந்தந்த ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கையை பொதுமக்கள் முன்பாக படித்து காண்பிக்க உத்தரவிட வேண்டும். இவைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: