காரியாபட்டி அருகே எச்சரிக்கை இல்லாத அபாய வளைவு

காரியாபட்டி, ஜன. 22: காரியாபட்டி அருகே, நரிக்குடி மெயின்ரோட்டில் கடமங்குளம் விலக்கில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் எச்சரிக்கை பலகை இல்லை. இந்த சாலை வழியாக முடுக்கன்குளம், மரைக்குளம், நரிக்குடி வழியாக மானமதுரை, ராமேஸ்வரம் வரை செல்லலாம்.  இந்த அபாய வளைவில் பல முறை விபத்துக்கள் நடந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; பலர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றன. இந்த வளைவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ‘எச்சரிக்கை பலகை வைக்கவோ, ஸ்டிக்கர் ஒட்டவோ நடவடிக்கை இல்லை. எனவே, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த அபாய வளையில், விபத்துகளை தவிர்க்க, எச்சரிக்கை பலகை வைக்கவும், சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: