பேருந்தில் இருந்து விழுந்து நெசவாளர் பலி

கும்பகோணம்  ஜன. 22:கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலசாலையை சேர்ந்தவர் முருகேசன் (47). நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (38). நேற்று முன்தினம் மாலை மனைவியுடன் ஒரு அரசு பேருந்தில் தஞ்சைக்கு முருகேசன் சென்று கொண்டிருந்தார்.

திருவலஞ்சுழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறியதில் முருகேசன், பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பலியானார்.

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: