பெரம்பலூர் எளம்பலூர் சாலைபாலமுருகன் கோயிலில் தைப்பூச தேர் திருவிழா

பெரம்பலூர், ஜன. 22: பெரம்பலூர் எளம்பலூர் சாலையிலுள்ள பால முருகன் கோயிலில் 39வது ஆண்டு தைப்பூசத் திருத்தேர் திருவிழா நடந்தது.

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையிலுள்ள பாலமுருகன் கோயிலில் 39வது ஆண்டு தைப்பூச திருவிழா நடந்தது. இதனையொட்டி காலை பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை ரமேஷ்குருக்கள் நடத்தினார். இதில் பெரம்பலூர், அரணாரை, எளம்பலூர், துறைமங்கலம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை திருத் தேர் வடம் பிடித்தல் நடந்தது. தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று  மீண்டும் நிலையை வந்தடைந்தது.

Related Stories: