காஞ்சிபுரம், ஜன.22: பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும், இதுகுறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீப காலமாக பேருந்துகளிலும், கடைகளிலும், பல வர்த்தக நிறுவனகளிலும், சில வங்கிகளிலும் பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து வாங்க மறுப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மற்றும் பல சமயங்களில் பல்வேறு ஊடகங்களின் மூலமாக பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் என பொதுமக்களுக்கும் அந்த நாணயங்களை பொதுமக்களிடமிருந்து அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.