மடையம்பாக்கம் கிராமத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்

செய்யூர், ஜன. 22: மடையம்பாக்கம் கிராமத்தில் தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. இலத்தூர் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடையம்பாக்கம் கிராமத்தில் தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. செய்யூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தசரதன் முன்னிலை வகித்தார். இலத்தூர் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் ஏமநாதன், மோகன்ராஜ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாபு, புதுப்பட்டு மோகன், தணிகாச்சலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: