மதுராந்தகம், ஜன.22: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையில் நேற்று கிரிவல நிகழ்ச்சி நடந்தது. இதில், சுமார் 5 ஆயிரம் பேர்கள் கலந்துகொண்டனர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ளது வஜ்ரகிரி மலை. இந்த மலையின் மீது பசுபதி ஈஸ்வரர், வஜ்ரகிரி வடிவேலன் ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த மலையைச் சுற்றி பொதுமக்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஏராளமான பக்தர்கள் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் வஜ்ரகிரி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அச்சிறுப்பாக்கம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக செல்கின்றனர்.