வாலாஜாபாத், ஜன. 22: வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் சார்பில் தீ தடுப்பு முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் முரளி தலைமை தாங்கினார். வகுப்பறைகளில் தீப்பிடித்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், வீடுகளில் தீ பிடித்தால் அதனை எளிய முறையில் எவ்வாறு அணைப்பது மற்றும் விபத்து நேரங்களில் முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கி பேசினர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் மாணவ, மாணவிகளிடம் தீயணைப்பு துறையினர் விளக்கினர்.