சென்னை, ஜன. 22: திருவள்ளூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரியின் டிரைவரை சரமாரியாக தாக்கி, ரூ.40 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் ஜெயபாண்டி(42). லாரி டிரைவர். இவர், மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, திருவள்ளூர் அடுத்த பாரிவாக்கம் பகுதியில் உள்ள குடோனுக்கு லாரியை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் காலை வண்டலூர் - நெமிலிச்சேரி உயர்மட்ட சாலையில் உள்ள காவல்சேரி அருகே வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியது. அப்போது, எதிர்பாராதவிதமாக பழுதாகி லாரி நின்றது.