பழுதாகி நின்றிருந்த லாரி டிரைவரை தாக்கி ரூ.40 ஆயிரம் பறிப்பு

சென்னை, ஜன. 22: திருவள்ளூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரியின் டிரைவரை சரமாரியாக தாக்கி, ரூ.40 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் ஜெயபாண்டி(42). லாரி டிரைவர். இவர், மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, திருவள்ளூர் அடுத்த பாரிவாக்கம் பகுதியில் உள்ள குடோனுக்கு லாரியை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் காலை வண்டலூர் - நெமிலிச்சேரி உயர்மட்ட சாலையில் உள்ள காவல்சேரி அருகே வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியது. அப்போது, எதிர்பாராதவிதமாக பழுதாகி லாரி நின்றது.

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் லாரியை பழுதுபார்க்க முடிய வில்லை. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் ஜெயபாண்டி மட்டும் லாரியில் தூங்கினார்.  நள்ளிரவு அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், டிரைவர் ஜெயபாண்டியை சரமாரியாக தாக்கியதோடு, அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போனை பறித்துச்சென்ற  மூவரை தேடி வருகின்றனர்.

Related Stories: