பொன்னேரி அருகே பட்டப்பகலில் காரில் வந்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

பொன்னேரி, ஜன.22: பொன்னேரி அடுத்த கடப்பாக்கத்தில் காரில் வந்து  கொள்ளை அடிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கருணானந்தம் (51). வீட்டின் முன் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். அவரது வீட்டின் முன் நேற்று மதியம்  ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் 4 பேர் இருந்ததாக தெரிகிறது.  அதில் இருந்து ஒருவர், கையில் கடப்பாரையுடன் இறங்கினார்.

பின்னர் கருணானந்தரின் வீட்டு கதவை உடைத்தார். இதை பார்த்த அப்பகுதியினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த காரில் இருந்தவர்கள், மின்னல் வேகத்தில் காரில் இருந்து இறங்கி ஓடினர்.  கதவை உடைத்தவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை பிடித்து  பொன்னேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த  பூபாலன் (35) எனவும், தப்பி ஓடியவர்  குணா என்றும் தெரிவித்தார். மேலும், வீட்டில் ஆள் இல்ைல என்பதை உறுதி செய்த பிறகு, கொள்ளை அடிக்க திட்டமிட்டு பூட்டை உடைத்ததும் தெரிய வந்தது.  இதையடுத்து பூபாலனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: