சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவடியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் ரயிலும், சூலுர்பேட்டையில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு ஆவடி சென்றடையும் ரயிலும் இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.