திருத்தணி: திருத்தணி அடுத்த காசிநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு வழங்கினர். திருத்தணி அடுத்த திருத்தணி நாகலாபுரம் சாலையில் காசிநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.இந்த கடையின் அருகே சில கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அந்த பகுதியில் இருந்து அரசு பள்ளிக்குச் செல்லும் பள்ளி மாணவிகளை குடிபோதை ஆசாமிகள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.