ஏரியில் மூழ்கி மாணவன் பலி

பல்லாவரம்: தண்டையார்பேட்டை, ராஜகோபாலன் நகர் 5வது தெருவை சேர்ந்த குமாரவேல் (20), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர்கள் 15  பேருடன்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அங்கு, ஏரியின் 5ம் கண் மதகு அருகே அனைவரும் கரையோரம் குளித்தனர்.

குமாரவேல் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக குமாரவேல் தண்ணீரில் தத்தளித்தார். அப்பகுதி மக்கள் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஏரியில் இறங்கி சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர், குமாரவேலுவை சடலமாக மீட்டனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: