பல்லாவரம்: தண்டையார்பேட்டை, ராஜகோபாலன் நகர் 5வது தெருவை சேர்ந்த குமாரவேல் (20), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர்கள் 15 பேருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அங்கு, ஏரியின் 5ம் கண் மதகு அருகே அனைவரும் கரையோரம் குளித்தனர்.
குமாரவேல் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார்.