கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

தாம்பரம்: குரோம்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரோஜா (75). இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் இறைக்க முயன்றபோது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர், சரோஜாவை மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரோஜாவை கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் மீட்டனர். இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: