தலைக்காடு பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா

திருத்துறைப்பூண்டி, ஜன.22: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு பழனியாண்டவர் கோயிலில் தைப் பூசவிழாவை முன்னிட்டு நேற்று காலை அருகிலுள்ள அய்யானார் கோயிலிலிருந்து பால்குடம் கொண்டுவரப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பின்னர் மாலை ரிஷபவாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அடப்பாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: