விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி நொறுங்கியது

சென்னை : விமான நிைலயத்தில் கடந்த 5 ஆண்டுகளில், மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள், சுவரில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள், சுவர் அலங்கார சலவை கற்கள் பெயர்ந்து விழுவது என இதுவரை 84 விபத்துகள்  நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 17 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை  85வது விபத்து நடந்தது. சர்வதேச முனையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதி 2ம் தளத்தில் உள்ளது. அதன் பின்பகுதி 17வது நுழைவாயில் அருகே 30 அடி உயரத்தில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த 4அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட பெரிய கண்ணாடி, நேற்று காலை 7.20 மணிக்கு திடீரென பெயர்ந்து, விமானங்கள் நிறுத்துவதற்கான 35வது நடைமேடை அருகே விழுந்து உடைந்து நொறுங்கியது.  அப்போது, அதிர்ஷ்டவசமாக நடைமேடையில், விமானங்கள் எதுவும் நிற்கவில்லை.

Related Stories: