கீழ்வேளூர் அருகே பூட்டி கிடந்த பள்ளியில் குடிமகன்கள் அட்டகாசம்

கீழ்வேளூர், ஜன.22:  நாகை மாவட்டம் கீழவேளூரை அடுத்த  வடக்குவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமை ஆசிரியர் ஜெயந்தி பூட்டி விட்டு சென்றுள்ளார்.  வழக்கம் போல் நேற்று காலை பள்ளியை  திறக்க வந்தபோது பள்ளியின் பூட்டு

உடைக்கப்படிருந்தது.இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள்  பள்ளியின் உள்ளே சென்று அங்கு இருந்த பீரோவை திறந்து மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை எடுத்து பார்த்துள்ளனர். மேலும்  மாணவர்கள் அமரும் கோரை பாய்யை விரித்து அதில் அமர்ந்து மது குடித்து விட்டு  அங்கேயே மதுபாட்டில்களை போட்டு விட்டு சென்று விட்டனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் போரில் கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: