மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பஸ் மோதி தொழிலாளி பலி

மயிலாடுதுறை, ஜன.22:  மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பஸ் மோதி டீக்கடை தொழிலாளி இறந்தார்.மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பன்னீர்செல்வம்(57) என்பவர் வேலை பார்த்து வந்தார். இரவு நேரப்பணி முடிந்து காலையில் ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றார். அப்போது, பெங்களூருவிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு விரைவு பேருந்து மோதியதில் பன்னீர்செல்வம் படுகாயமடைந்தார். உடனே அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: