சொக்கம்பட்டி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

புளியங்குடி, ஜன.22:  சொக்கம்பட்டி அருகே சங்கனாப்பேரியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (60). இவர் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டுக் கதவை திறந்து போட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீடு புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த தோடு, மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டார். இதை பேச்சியம்மாள் கவனிக்கவில்லை. நேற்று திடீரென்று பீரோவிலிருந்த நகைகளை சரி பார்த்தபோது 3 பவுன் நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ நிஷாந்த் விசாரித்ததில், 3 மாதங்களுக்கு முன்பு கதவை திறந்து போட்டு தூங்கும் போது நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. அப்போது யாரோ வீட்டுக்குள் வந்து போன தடயங்கள் இருந்தன. ஆனால் நகை திருட்டு போனது, மூதாட்டிக்கு தெரியவில்லை. தற்போது நகைகளை சரி பார்த்த போது, 3 பவுன் நகையை காணாததால் மூதாட்டி பேச்சியம்மாள், புளியங்குடி போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: