கல்வி உதவித்தொகை வழங்கல்

தென்காசி, ஜன.22:  தென்காசியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. தென்காசியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி உதவி தொகை வழங்கும் முகாம் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் திப்புசுல்தான் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது இப்ராகிம் முன்னிலை வகித்தார். நகர தலைவர் செய்யது அலி பாதுஷா வரவேற்றார். தேசிய பொது செயலாளர் முகம்மது அலி ஜின்னா சிறப்ப்பு விருந்தினராக பங்கேற்று 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பேசினார். முன்னதாக அக்சஸ் இந்தியா பயிற்சியாளர் மீரான் மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், மற்றும் முன்னேற்றம் குறித்து பயிற்சியளித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம்சேட் நன்றி கூறினார்.

Related Stories: