மத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறு, ஜன. 22: மத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் கயத்தாறில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் தாசு தலைமை வகித்தார். சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் வீரபெருமாள் (கோவில்பட்டி), சரவணன் (தூத்துக்குடி), மற்றும் சுப்புராஜ் (ஓட்டப்பிடாரம்) முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் கத்தார் பாலு, மாவட்ட துணைச் செயலாளர் பீமாராவ் பேசினர்.

மேற்கு ஒன்றியச் செயலாளர் வேல்முருகன், கடால் குடிகணேசன் மற்றும் சூரங்குடி முத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநில துணை நிதிச் செயலாளர் ஆதி வீரன் நன்றி கூறினார்.

Related Stories: