கோவில்பட்டியில் வள்ளலார் குருபூஜை

கோவில்பட்டி,  ஜன. 22: கோவில்பட்டியில்  சன்மார்க்க திருஞான சபை சார்பில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் குருபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.  கோவில்பட்டி அங்காள  பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் ஜோதி மயானந்த சுவாமிகளின்  சன்மார்க்க ஞானகுருநாதர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் 51வது குருபூஜை நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஞானயோக தியானம், 7.20  மணிக்கு மாரியப்பன் குழுவினரின் மங்கள இசை, காலை 8 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 8.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, காலை 9 மணிக்கு சன்மார்க்க சொற்பொழி நடந்தது.

தொடர்ந்து  வள்ளலார் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலும் நடந்தது.  தொழிலதிபர் ரமேஷ் அன்னதானத்தை துவக்கிவைத்தார். சபை நிர்வாகிகள்  கோபால கிருஷ்ண சுவாமிகள், அதிகாரி சுவாமிகள், பாலசுப்பிரமணியன்,  சுந்தரராஜன், சேதுப்பாண்டியன், ஜோதி சோமசுந்தரம், ஜோதி சரவணன்,  சின்னச்சாமி, அரசு வக்கீல் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாலை   5 மணிக்கு வள்ளலார் படத்துடன் வீதியுலா நடந்தது.

Related Stories: