கோவில்பட்டி, ஜன. 22: கோவில்பட்டியில் சன்மார்க்க திருஞான சபை சார்பில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் குருபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் ஜோதி மயானந்த சுவாமிகளின் சன்மார்க்க ஞானகுருநாதர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் 51வது குருபூஜை நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஞானயோக தியானம், 7.20 மணிக்கு மாரியப்பன் குழுவினரின் மங்கள இசை, காலை 8 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 8.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, காலை 9 மணிக்கு சன்மார்க்க சொற்பொழி நடந்தது.