சாத்தான்குளத்தில் ஓய்வூதியர் சங்க கூட்டம்

சாத்தான்குளம், ஜன. 22:சாத்தான்குளம் செட்கோ வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவர் சிங்கராயன் தலைமை வகித்தார். மணி வரவேற்றார். கடந்த கூட்ட அறிக்கையினை செயலாளர் சுப்பையா வாசித்தார். பொருளாளர் பால்துரை நிதிநிலை அறிக்கை வழங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் வின்சென்ட், ஐசக் சத்தியநேசன், ஆஞ்சலாரோஸ்மேரி, ஞானசுந்தரம் உள்ளிட்டோர் சங்கப் பணிகள் குறித்து உரையாற்றினர். கூட்டத்தில் கஜா புயலில்  உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வட்டக்கிளை சார்பில் கஜா நிவாரண நிதிவழங்கப்பட்டது. யோகா ராஜலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: