கூடலூர், ஜன. 18: தமிழக-கர்நாடக எல்லையில் காரில் கடத்தி வரப்பட்ட 204 மதுபாட்டில்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். தமிழக-கர்நாடக எல்லைப் பகுதி வாகன சோதனை சாவடியில் நேற்று தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை இப்பகுதியில் கர்நாடக பகுதியில் இருந்து ஊட்டிக்கு வந்த கார் ஒன்றை சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்தனர். இதில் 204 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் வந்த ஊட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார்(42), என்பவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின் மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.