மது விற்ற இருவர் கைது

ஊட்டி, ஜன, 18:திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே  சோலூர்மட்டம் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் எஸ்.ஐ., ராமமூர்த்தி தலைமையிலான ேபாலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 60 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அக்கடை உரிமையாளர் ஸ்டீபன்(29) என்பவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 60 மதுபாட்டில்கள், ரூ.11 ஆயிரத்து 110 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: