வாலிபர் தற்கொலை

ஈரோடு, ஜன. 18: நாகாலாந்து மாநிலம் சகியாத்திமாபூர் பகுதியை சேர்ந்தவர் குமார்ராய். இவரது மகன் யகாடொ (24). இவர், தமிழகத்திற்கு வேலை தேடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். அப்போது, சென்னையில் பணியாற்றிய போது அங்கு ஒரு பெண்னை காதலித்தார். ஆனால், அந்த பெண் காதலிக்க மறுத்ததால் யகாடொ மனமுடைந்து காணப்பட்டார். பின்னர், கடந்த சில மாதங்களாக ஈரோடு மாணிக்கம் தியேட்டர் பின்புறம் உள்ள சேக்தாவூத் வீதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சுடிதார் துப்பட்டவால் தூக்கு மாட்டி யகாடொ தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: