26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கும்பகோணம், ஜன. 18: கும்பகோணம் அடுத்த கொட்டையூரில் வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 1993ம் ஆண்டு 10ம் வகுப்பை 60 மாணவர்கள் படித்தனர். இந்நிலையில் நேற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்று தங்களது அனுபவங்கள், பள்ளி நாட்களில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஆசிரியர்களுக்கு கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து சங்கமம் என அமைப்பு துவங்கப்பட்டு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக பள்ளிக்கு வழங்கப்பட்டது.

Related Stories: