குண்டும், குழியுமான சாலையை சீர் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - பாஜகவினர் திரண்டனர்

தேன்கனிக்கோட்டை, ஜன.18:  கெலமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன் குண்டும், குழியுமான சாலையை சீர் செய்யக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெலமங்கலம் பாரந்தூர் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. அருகில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோயில் உள்ளது. சாலையில் சாக்கடை நீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. எனவே, சாலையை சீர் செய்ய வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.

இதனை கண்டித்தும், சாலையை சீர் செய்யக்கோரியும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சந்துரு, நகர தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் நாகேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் தலைவர் மனோகரன், கோவிந்தம்மாள், எல்லம்மாள், லட்சுமம்மா ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: