102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை

சீர்காழி, ஜன.18: முன்னாள் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாளையொட்டி சீர்காழி ஈசான்ய தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்எல்ஏ பாரதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அனைவரும் இனிப்பு வழங்கினர். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பூராசாமி, சக்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜமாணிக்கம், மாமல்லன், போகர்ரவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி துணை தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கொள்ளிடம்: கொள்ளிடத்தில், எம்.எல்.ஏ பாரதி தலைமையில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்  நற்குணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன்,  பாலதண்டாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர்கள் ஆனந்தநடராஜன், பூவராகவன், உதயன், பேரவை செயலாளர் சொக்கலிங்கம்  உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொள்ளிடம்  கடை வீதியிலிருந்து  ஊர்வலமாக புறப்பட்டு சென்று கொள்ளிடம் சோதனை சாவடி அருகே உள்ள எம்.ஜி.ஆர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காரைக்கால்: காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அதிமுக சார்பில் கிளிஞ்சல்மேடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, மாவட்ட அதிமுக செயலர் ஓமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ அசனா, மாவட்ட அதிமுக நிர்வாகிகள், காதர், ஆதிமுத்து, ஆரிபு, சகாயம், ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாவட்ட அதிமுக கட்சி அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, பேருந்து நிலையம், பெரியப்பள்ளிவசல் அருகில்,  திரு.பட்டினம், பேருந்து நிலையம், கோட்டுச்சேரி மற்றும் நகர் பகுதி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் புகைபப்டத்திற்கு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

Related Stories: