காவேரிப்பட்டணம், ஜன.18: காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில், பாமக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட அமைப்பு செயலாளர் பரசுராமன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஷகில்அகமது, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், முனியப்பன், சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புதுப்பானையில் பொங்கலிட்டனர். கரும்பு, மஞ்சள் கொத்துக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் அக்ரி சுப்பிரமணி, மகளிரணி சங்கீதா லிங்கேஸ்வரன், துணை செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ேமலும் சின்னராஜூ, பழனி கவுண்டர், குப்புசாமி, காமராஜ், ஆட்டோ சங்கர், ஒன்றிய நிர்வாகிகள் வஜ்ரவேல், சபரி சத்யராஜ், ஷகிலா, முருகன், ஜெயராமன் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.