சீர்காழியில் திருவள்ளுவர் தினவிழா

சீர்காழி, ஜன.18: சீர்காழியில் திருக்குறள் பன்பாட்டு பேரவை சார்பில் திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் வெங்கடேசபாரதி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம், ராஜராமன், வெங்கடேன், முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வீழிநாதன் வரவேற்றார். விழாவில் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் காந்தி பூங்காவில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில்   செயலாளர் அன்பழகன், பரமசிவம், காமராஜ், நீலமேகம் கலந்து கொண்டனர்.

Related Stories: