கிருஷ்ணகிரியில் நாளை மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.18:    கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர் பாலமுரளி வெளியிட்டுள்ள அறிக்கை:  கிருஷ்ணகிரி புதுப்பேட்டை லட்சுமணராவ் தெருவில் உள்ள வெல்கம் மகாலில் நாளை(19ம் தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட மதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை வகிக்கிறார். இதில் கழக வளர்ச்சி குறித்தும், தேர்தல் நிதி வசூல் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, சார்பு அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், கழக தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேடடுக்கொள்கிறேன்.  

இவ்வாறு தனது அறிக்கையில் மதிமுக மாவட்ட செயலாளர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.  

Related Stories: