தோகைமலையில் அனுமதியின்றி மதுபானம் விற்ற வாலிபர் கைது

தோகைமலை, ஜன.18: தோகைமலையில் அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சரகம் நாடக்காப்பட்டியில் உள்ள மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகவேல் (37). இவர் நாடக்காப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகார் கொடுத்தனர்.இதன் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: