பைக் மோதி முதியவர் பலி

தோகைமலை ஜன. 18: தோகைமலை அருகே ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற முதியவர் பைக் மோதி பலியானார். கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (60). இவர் நேற்று ஆர்.டி.மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண காவல்காரன்பட்டியில் இருந்து ஆர்.டி.மலைக்கு திருச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஓட்டி சென்ற பைக் மோதியதில் வீராச்சாமி சம்பவ இடத்தில் பலியானார்.இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் வீராச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: