கரூர், ஜன. 18: கரூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி நேற்று காணும் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு போட்டிகள், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நேற்று கரூர் டவுன் சரகத்தில் 35 இடம், பசுபதிபாளையம் 25 இடம், தாந்தோணிமலை 27, வெள்ளியணை 13, வாங்கல் 42, வெங்கமேடு 20, அரவக்குறிச்சி 11, சின்னதாராபுரம் 17, க.பரமத்தி 13, தென்னிலை 5, வேலாயுதம்பாளையம் 20, குளித்தலை 5, லாலாப்பேட்டை 10, மாயனூர் 26, தோகைமலை 5, சிந்தாமணிப்பட்டி 9, பாலவிடுதி சரகத்தில் 3 இடங்களில் என 286 இடங்களில் விழா நடைபெற்றது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.